தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பு
டெல்லி:
தமிழகத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு கூறியுள்ளது.
டெல்லியில் தேசிய நீர்வள கவுன்சில் செயற்குழுவின் உயர்நிலைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக, அமைச்சர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார். கர்நாடக அரசின்சார்பாக, அம்மாநில அமைச்சர் எச்.ஜே. பாட்டீல் கலந்து கொண்டார்.
கூட்டம் முடிந்த பிறகு கர்நாடக அமைசச்ர் செயதியாளர்களிடம் கூறுகையில், ஆற்றுப்படுகை அமைப்புகளுக்குசட்டபூர்வமாக அதிகாரம் அளிப்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் நடவடிக்கையாகும்.
நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, நதிநீர் பங்கீடு தொடர்பாக வழிகாட்டும் முறைகள் உருவாக்கப்படும் எனஅறிவித்திருந்தார்.
அதை செயல்படுத்த தற்போதைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.கர்நாடகத்திலிருக்கும் அணைகள் அனைத்தும் வறண்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது.
மேட்டூர் அணை நிரம்பியிருக்கும் நிலையில் தமிழகம் தண்ணீர் கேட்டு வற்புறுத்தக் கூடாது. தண்ணீர் பற்றாக்குறைநிலவும் போது மட்டுமே தண்ணீர் கேட்க வேண்டும். காவிரி நீர் பிரச்சனையிலி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகம்மதிக்கிறது.
சென்ற ஆண்டு குறிப்பிட்ட அளவைவிட 100 டி.எம்.சி. தண்ணீரை கூடுதலாக திறந்து விட்டிருக்கிறோம். நடுவர்மன்ற இடைக்கால உத்தரவின்படி ஜுன் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரில் சிறிதளவு நிலுவைஉள்ளது.
கர்நாடக அணைகள் அனைத்தும் வறண்டுள்ளதால் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது. பருவமழை தொடங்கிநிலைமை நீர்வரத்து அதிகரித்தால் தண்ணீர் திறந்துவிட தயராக உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications