For Quick Alerts
For Daily Alerts
Just In
பொறுப்பில்லாத கணவர் .. மனைவி தற்கொலை
சென்னை:
சென்னை அருகே, கணவர் வேலை இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண சகிக்காமல் கர்ப்பிணிமனைவி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அருகேயுள்ள திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் வசிப்பவர் தேவ ஞானராஜ். இவர் கூலித்தொழிலாளி. ஆனால் சரியாக வேலைக்குப் போவதில்லை. நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருப்பது வழக்கம்.
ஞானராஜின் மனைவி புவனேஸ்வரி (20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போதுபுவனேஸ்வரி 6 மாத கர்ப்பமாக இருந்தார். கணவர் சரியாக வேலைக்குச் செல்லாமலும், ஒழுங்காகசம்பாதிக்காமலும் இருந்து வந்ததால் மனைவி புவனேஸ்வரிக்கு கவலையாக இருந்தது.
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கணவர் கேட்காததால் மனம் உடைந்தார். இதையடுத்து செவ்வாய்க்கிழமைமாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில், உடலில் மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டு தற்கொலைசெய்து கொண்டார்.
Comments
Story first published: Thursday, June 21, 2001, 5:30 [IST]