For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர்களுக்கு ஜெ. நிதியுதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்திலுள்ள 32 மீனவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.19.75 லட்சம் நிதி உதவியை முதல்வர்ஜெயலலிதா வழங்கினார்.

மீனவர்களின் நன்மைக்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது மீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்.இதுதவிர, மீனவர் தனிநபர் காப்புறுதித் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டங்களின் கீழ், மீனவர்கள் இறந்து போனாலோ, ஊனமடைந்தாலோ, ஆண்டுச் சந்தாவைப் பொறுத்து,அதிகபட்சம் ரூ.2.65 லட்சமும், குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரமும் உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம்,தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 32 மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.19.75லட்சம் உதவித் தொகை அளித்தார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X