ஆபரேஷன் "ஜெ ஜெ"
கோவை: சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடி அதிரடிப்படையினர் நடத்தி வரும் வேட்டைக்கு "ஜெ.ஜெ ஆபரேஷன் எனப்பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீரப்பனைத் தேடும் பணியை வியாழக்கிழமை காலை அதிரடிப்படை துவக்கியது. வீரப்பனைப் பிடிக்கஅதிரடிப்படைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள தேவாரம் மற்றும் ஐ.ஜி விஜயகுமார் ஆகியோர் இன்று முறைப்படிதேடுதல் வேட்டையைத் துவக்கினர்.
அதிரடிப்படையினரின் இந்தத் தேடுதல் வேட்டைக்கு "ஜெ.ஜெ ஆபரேஷன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெ.ஜெ. என்பது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் "இனிஷியல் என்பதுகுறிப்பிடத்தக்கது.
3,000 போலீஸார் கொண்ட அதிரடிப்படை, 16 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு காட்டுப் பகுதிக்குள்முற்றுகையிட்டுள்ளது. இந்தக் குழுக்கள் புளியங்கோம்பை, கடம்பூர், தாளவாடி, செல்லப்பன்தொட்டி, கெத்தேசால்,ஜெரானாம்பட்டி, உரியாடை, ரம்பையனூர், பெட்டமந்து ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் ஊடுருவினர்.
சத்தியமங்கலத்தில் அருகே உள்ள கேர்மளம் பகுதி, அடர்ந்த காடுகளை உள்ளடக்கியது. இங்கு சில அடி தூரம்முன்னால் செல்லும் நபரைக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு மரங்கள் மற்றும் செடி, கொடிகள் மிகுந்திருக்கும்.இந்த முறை வீரப்பனைப் பிடிக்க தீவிர முயற்சிகள், புதிய வியூகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது இந்தத் தேடுதல் வேட்டையில், கமோண்டோ படை, எல்லைப் பாதுகாப்பு படை, கர்நாடக-தமிழகஅதிரடிப்படை ஆகிய வீரர்கள் காட்டுக்குள் செல்கின்றனர். இந்தப்படையினருக்கு சிறப்பு பயிற்சிகளும்அளிக்கப்பட்டுள்ளன. அதிரடிப்படையினருக்கு கையெறி குண்டுகள், சிறிய வகை ராக்கெட்டுகள், பைனாகுலர்கள்,நீண்ட தூரம் இலக்கைச் சுடும் நவீன துப்பாக்கிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக 5 நாட்களுக்கு தொடர் வேட்டை நடக்கும். பின்னர், தேடுதல் வேட்டையில் ஏற்பட்டுள்ளமுன்னேற்றம், அல்லது பின்னடைவு பற்றி அதிகாரிகளுடன் தேவாரம் ஆலோசனை நடத்துவார். வீரப்பனைப்பிடிக்கும் இந்த முயற்சியில் தேவாரம் வெற்றி பெறுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.