சிறுமுகையில் தேவாரம்..கடம்பூரில் விஜயகுமார்
கோவை:
வீரப்பனைத் தேடி இரு மாநில அதிரடிப்படைகளின் தலைவர் தேவாரம் சிறுமுகை காட்டுக்குள் நுழைந்தார்.ஐ.ஜி.,விஜயகுமார் கடம்பூர் காட்டுக்குள் சென்றார்.
அதிரடிப்படைகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேவாரம், கோவை சிறுமுகை காட்டுக்குள் சென்றார்.இந்தப் பகுதியில் உள்ள லிங்காபுரம் காட்டுப் பகுதியில், வியாழக் கிழமை காலை 8 மணிக்கு நுழைந்தார். அவர்உழியூர் வனப் பகுதி வழியாக தனது தேடுதல் வேட்டையை மேற்கொண்டார்.
இந்த தேடுதல் வேட்டைக்கு உழியூரைச் சேர்ந்த ஒருவரை அதிரடிப்படையினர் அழைத்துச் சென்றனர். அவர்,காட்டுப் பகுதியை நன்கு அறிந்தவர் என்பதால், தேடுதல் வேட்டைக்கு உதவியாக அழைத்துச் சென்றனர்.
சுமார் 20 குடும்பங்களைக் கொண்ட உளியூர் கிராமத்தினர் கூலி வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.வீரப்பன் குறித்து தகவல் தெரிந்தால், அதிரடிப்படையினருக்கு உதவுவதாக அந்த கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
சேலலையில் அதிரடிப்படையினர் முகாம்:
தற்போது சேலலை தேவிபாறை என்ற இடத்தில் அதிரடிப்படையினர் முகாமிட்டுள்ளனர். தேவையான உணவுப்பொருட்கள் அவர்களிடம் உள்ளதால், சிறிது நாட்கள் இங்கு தேடுதல் வேட்டை தொடரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டி.எஸ்.பி.,யாக இருந்த சண்முகநாதன், சிறுமுகையில் உள்ள அவரதுபண்ணை வீட்டில் இருந்தபோது கடத்திச் செல்லப்பட்டார்.
அப்போது, அவரை மீட்கும் பணியில் தேவாரம் ஈடுபட்டார். தற்போது அதே பகுதியிலிருந்து தேவாரம் தனதுவேட்டையைத் துவக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications