ரயில் விபத்து: ஜெ.அனுதாபம்
சென்னை:
சென்னை ரயில் கேரளா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுதாபம்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி:
மங்களூரிலிருந்து சென்னை வந்த ரயில் கேரள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது மிகவும் துயரமான சம்பவமாகும்.
ரயில் விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்ற செய்தி கேட்டு மிகவும்வருத்தமடைந்தேன். இந்தச் சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில்பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மீட்புப்பணிக்கு வாஜ்பாய் உத்தரவு:
ரயில் விபத்துக் குறித்துத் தகவல் தெரிந்ததும் கேரள மாநிலத்திற்கு அருகிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும்மீட்புப்பணிகளை அனுப்பி வைக்க வாஜ்பாய் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடந்த இடத்துக்குச் செல்லுமாறு ரயில்வே அமைச்சர் நிதீஷ் குமாருக்கு உத்தரவிட்டுள்ளார் வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications