6 மாதங்களில் வீரப்பனை பிடிப்போம்: தேவாரம்
மேட்டுப்பாளையம்:
மலை வாழ் மக்களின் உதவியுடன் வீரப்பனை விரைவில் பிடிப்போம் என்று இரு மாநில கூட்டு அதிரடிப்படை தலைவர் தேவாரம்தெரிவித்தார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக-கர்நாடக அதிரடிப்படை வீரர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
சிறுமுகை காட்டுக்குள் தேவாரம் அதிரடிப்படை வீரர்களுடன் நுழைந்தார். சிறுமுகை காட்டுக்குள் சென்ற தேவாரம் உப்புப்பள்ளம்என்ற பகுதியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
வீரப்பனைப் பிடிப்பதில் தமிழக அரசு மிகவும் உறுதியாக உள்ளது. இதற்காக அதிரடிப்படைக்கு நவீன ரக ஆயுதங்கள் முதல்அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் நடமாட்டம் அதிகமாக உள்ள வனப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆதிவாசிகளை சந்தித்து அவர்களிடம்தகவல்களைப் பெறத் திட்டமிட்டுள்ளோம். எங்களது தேடுதல் வேட்டையில் கிராம மக்களுக்கு எவ்வித இடையூறுகளும்இருக்காது.
சேலம், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வீரப்பன் நடமாட்டம் அதிகமாக உள்ள கிராம மக்களிடம் விசாரணைநடத்தவுள்ளோம்.
இதே போல் மைசூர், சாம்ராஜ் ஆகிய பகுதிகளில் உள்ள கிராம மக்களையும் சந்திக்க உள்ளோம். இதுவரை உளியூர், ஆருர், கீழ்பெரியூர், உப்புப்பள்ளம் ஆகிய கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து வந்துள்ளோம்.
எங்கள் தேடுதல் வேட்டையின்போது மனித உரிமை மீறல்கள் எதுவும் இல்லை.
பரிசு அறிவிப்பு:
வீரப்பன் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ 25 லட்சம், வீரப்பனது கூட்டாளி சேத்துக்குளி கோவிந்தன் பற்றி தகவல்சொல்பவர்களுக்கு ரூ 15 லட்சம், பிற கூட்டாளிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ 10 லட்சம் என்று தமிழக-கர்நாடக படைகள்பரிசுத் தொகைகள் அறிவித்துள்ளன.
அதிரடிப்படையில் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இளம் வீரர்கள் சேர்ந்துள்ளனர்.
கிராமங்கள் தத்தெடுப்பு:
வீரப்பன் பற்றி ஒருவர் தகவல் கொடுத்தால் அவருக்கு ரூ 1 லட்சம் அளிக்கப்படும். ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்கொடுத்தால் பணம் கிராம மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
அந்த கிராமத்தை அரசு தத்தெடுத்துக் கொள்ளும். அந்த கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர்வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
வீரப்பன் நடமாட்டம் உள்ள வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையை முடித்துக் கொண்டு 25 ம் தேதிக்குள் வந்து விடுவோம்.அதிரடிப்படை வீரர்கள் அனைவரும் வெளியே வர மாட்டார்கள். பாதிக்கும் மேற்பட்ட அதிரடிப்படை வீரர்கள் மாறுவேடத்தில்காட்டுக்குள் ரோந்துப்பணியில் ஈடுபடுவர்.
வீரப்பனைப் பிடிக்கும் வரை சத்தியமங்கலம் காட்டிலிருந்து சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்போம். வீரப்பனை ஒருஆண்டுக்குள் பிடிக்க வேண்டும் என்று அரசு கால அவகாசம் அளித்துள்ளது.
அரசின் உறுதி, கிராம மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அதிரடிப்படையினரின் கடும் உழைப்புடன் வீரப்பனை நாங்கள் பிடித்தேதீருவோம்.
6 மாதங்களில் வீரப்பனைப் பிடிப்போம் என்று உறுதி கொண்டுள்ளோம் என்று தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப்படை தலைவர்தேவாரம் கூறினார்.