பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கடலுண்டி ஆற்றில் ரயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சாவு எண்ணிக்கை 100 ஐத்தாண்டும் என்று தெரிய வந்துள்ளது.

தடம் புரண்ட 6 பெட்டிகளில் 500 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் வெள்ளிக்கிழமைஇரவு 9 மணி வரை 100 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே அமைச்சர் விரைந்தார்:

விபத்து குறித்துத் தெரிந்து கொண்டதும் மத்திய ரயில்வே அமைச்சர் நிதீஷ் குமாரும், ரயில்வே வாரியத் தலைவரும் சம்பவஇடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மங்களூரிலிருந்து சென்னைக்கு:

முன்னதாக, மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சென்னை மெயில் (ரயில் எண் 6602) வெள்ளிக்கிழமை மாலைகோழிக்கோட்டுக்கு வரும் வழியில் அங்குள்ள கடலுண்டி ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது.

பயணிகள் சுதாகரிப்பதற்குள் ஆறு பெட்டிகள் திடீரென்று தடம்புரண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

மூழ்கிய பெட்டிகளில் ஒன்றில் முழுவதும் பெண்கள் மட்டுமே இருந்தனர். மற்ற இரண்டு பெட்டிகளும் முன்பதிவு செய்யாதவைஎன்பதால் அதில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.

சேறு நிறைந்த ஆற்றுக்குள் மூழ்கிய பெட்டிகளில் அகப்பட்டுக் கொண்ட பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் வெளியேவரமுடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில் 100 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்றுகருதப்படுகிறது. அது மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதுவரை 57 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 34 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி, பரப்பனங்காடி, திரூர், மலப்புரம் மற்றும் பலபகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மீட்புப்பணிகள் தீவிரம்:

விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தீயணைப்புப்படையினரும், போலீஸாரும் முதற்கட்ட மீட்புப்பணியில் ஈடுபட்டனர். கொச்சி கடற்படை மையத்தில் இருந்தும்மீட்புப்படை வரவழைக்கப்படவுள்ளது.

கேரள முதல்வர் விரைந்தார்:

இந்தக் கோர ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கேரள முதல்வர் அந்தோணி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

கோழிக்கோடு, மலப்புரம் மாவட்ட நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணியில் செயல்பட வேண்டுமெனமுதல்வர் அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் செயலகத்தில் தனி அவசர கண்காணிப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு:

இந்தக் கோர விபத்தால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மழை பெய்வதால்மீட்புப்பணியும் முழுவீச்சில் நடைபெற முடியாமல், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட தகவல்படி, ரயில்வே பாலம்உடைந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+