புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் நாளை "பந்த்"

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் திங்கள்கிழமை "பந்த்" நடைபெறும் என்று, பாண்டிச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர்அறிவித்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிஅவர்கள் இந்த "பந்த்"திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தமிழகப் பொருளாளர் முடக்கத்தான் பாண்டி, கடந்த ஜூன் 19ம் தேதி கொலைசெய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் வெள்ளிக்கிழமை "பந்த்" நடந்தது. இதற்கான முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக, திருமாவளவன் உள்பட பலரும் வியாழக்கிழமையன்றே கைது செய்யப்பட்டனர்.

மேலும், வெள்ளிக்கிழமை நடந்த "பந்த்"தின் போது, பஸ்களை உடைத்துச் சேதப்படுத்தியதற்காக, தமிழகம் முழுவதும்இந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 1,500 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், திருமாவளவனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், பாண்டி கொலை பற்றி சி.பி.ஐ.விசாரணைக்குத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரியும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த இவ்வமைப்பினர்வரும் திங்கள்கிழமை, பாண்டிச்சேரியில் ஒருநாள் "பந்த்"துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+