பெரு நாட்டில் பூகம்பம்: 100 பேர் சாவு
அரகுஸ்பா (பெரு):
பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 100 பேர் பலியாகி விட்டனர். 500 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட இந்தப் பூகம்பம், ரிச்டர் அளவுகோலில் 7.9என்று பதிவாகி இருந்தது. இந்தப் பூகம்பம் 1 நிமிடத்திற்கும் மேல் நீடித்தது என்று கூறப்படுகிறது.
இந்நாட்டிலுள்ள அரகுஸ்பா நகரில் ஏராளமான வீடுகளும், புராதன கட்டடங்களும் இடிந்து தரைமட்டம் ஆகின.இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சர்ச்சும் இந்தப் பூகம்பத்தில் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளுக்கிடையே இன்னும் அதிகமான மக்கள் சிக்கியிருப்பார்கள் என்று கூறப்படுவதால், பலியானவர்களின்எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
மீட்புப் பணி நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. 22 டன் எடையுள்ள உணவு, மருந்து,போர்வைகள் உடனடியாக விமானங்கள் மூலம் பூகம்பம் நடந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
பெரு நாட்டு அதிபரும் உடனடியாக பூகம்பம் நடந்த நகருக்கு விரைந்துள்ளார்.
இந்நாட்டிற்கு அருகில் உள்ள சிலி மற்றும் பொலிவியா நாடுகளிலும் லேசான பூகம்பம் ஏற்பட்டதாகத் தகவல்கள்தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications