புழுத்த அரிசியைக் கேரளாவுக்கு விற்க முயற்சி?
சென்னை:
புழுத்துப் போன அரிசியைக் கேரளாவிற்கு விற்க முயற்சிப்பதாக முதல்வர் ஜெயலலிதா மீது முன்னாள் முதல்வரும்திமுக தலைவருமான கருணாநிதி புகார் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் ரேஷனில் அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது புழுத்த அரிசி என்று முதல்வர் ஜெயலலிதா புகார்கூறியிருந்தார். ஆனால் இப்புகாரை கருணாநிதி மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், புழுத்துப் போன அரிசி என்றால், அந்த அரிசியைக் கேரளாவிற்கு விற்பதற்கு ஏன் தற்போதுமுயற்சித்து வருகிறார்கள் என்று கருணாநிதி கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஜெயலலிதாவால்அண்மையில் நியமிக்கப்பட்டவர் வி. குணாளன்.
இவர் கேரள அரசுக்கு 12.6.2001 அன்று எழுதிய கடிதத்தில், "தமிழகத்தில் போதுமான அளவு அரிசி உள்ளது. இதுதரமானதாகவும் உள்ளது. சிகப்புக் கலர் கொண்ட அரிசியைக் கேரள மக்கள் விரும்புவார்கள் என்பதால், இந்தஅரிசியைக் கேரள நுகர்வோர் வாணிபக் கழகத்திற்கு விற்கலாம் என்று நினைக்கிறோம். அரிசி வாங்குவதற்கானமற்ற விவரங்களைப் பேச உங்கள் அதிகாரிகளை அனுப்பி வையுங்கள்" என்று எழுதியுள்ளார்.
புழுத்த அரிசி என்று சொன்ன ஜெயலலிதா, தரமான அரிசி என்று கேரளாவிற்கு விற்க முயற்சிக்கிறார்.இதிலிருந்தே அவர் திமுக ஆட்சியைப் பற்றிக் கூறிய புகார் எல்லாம் பொய் என்று தெரிய வருகிறது.
மக்களை முட்டாள்களாக்குவதற்காகத்தான், அரிசி கொள்முதலில் ஊழல் என்றும், புழு பூச்சிகள் நிறைந்த புழுத்தஅரிசி என்றும் முழங்குகிறார் ஜெயலலிதா. இது என்ன நியாயம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.