அதிமுக, திமுக எங்களுக்கு எதிரிகள் அல்ல: வைகோ
ஈரோடு:
அதிமுகவும், திமுகவும் எங்களுக்குப் பகையாளிகள் அல்ல என மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.
ஈரோட்டில் நடந்த மாவடட் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசியதாவது:
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் இரண்டு வலுவான சக்திகளை எதிர்த்து நின்று பெரும் தோல்வியை நாம்தழுவினாலும், பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்கிறோம். இது இந்த இயக்கத்தின் வெற்றி.
திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட, 15 தினங்களில் தேர்தலைச் சந்தித்தோம். 30 இடங்களில் கூட போட்டியிடதகுதியற்ற கட்சி என திமுக கருதி உதாசீனப்படுத்தினாலும், பல தொகுதிகளில் 15 ஆயிரம் ஓட்டுக்களுக்கும் மேல்பெற்று எங்கள் பலத்தை நிரூபித்துள்ளோம்.
திராவிடக் கொள்கை தமிழகத்தில் மங்கிப் போய் விட்டது. இந்தக் கொள்கையின்படி நடக்கும் மதிமுக, அதை சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்யும். திமுகவை ஒரு பகையாளியாக மதிமுக என்றும் நினைக்கவில்லை, அதிமுகவும்எங்களுக்கு எதிரி அல்ல. மதிமுக தனது பணியைத் திட்டமிட்டு செய்து வருகிறது. மக்கள் நம்பிக்கையைப் பெறும்முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றார் வைகோ.