For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக பெண் செயலாளர் மீது தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கள்ளச்சாராய கும்பலை காட்டிக் கொடுத்த அ.தி.மு.க. பெண் செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது.

சென்னை, ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வரும் ரகு என்பவரின் மனைவி மலர் (வயது 27). இவர் 10வது வட்ட அ.தி.முக.செயலாளராக இருந்து வருகிறார்.

இதே பகுதியில் வசித்து வரும் குப்பு என்பவர் தனது மகன்களுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்றவற்றைவிற்பனை செய்துவந்தார்.

போதை பொருள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனையை நிறுத்துமாறு மலர் பலமுறை குப்புவை எச்ச்சரித்துள்ளார். ஆனால் குப்புஅதை சட்டை செய்யாமல் தொடர்ந்து விற்பனையை நடத்தி வந்தார்.

இதையடுத்து குப்புவின் மீது மலர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் குப்புவின் மகன்களானபாபா, பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் மூவரும் சனிக்கிழமை சிறையிலிருந்து வெளி வந்தனர். தங்களை போலீசில் காட்டிக் கொடுத்த மலரை பழிவாங்கதிட்டம் தீட்டினர்.

இவர்கள் மூவரும் சனிக்கிழமை இரவு மேலும் 7 பேருடன் மலரின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டினர். மலர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக மலர் சாகவில்லை. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X