துபாய் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
துபாய்:
துபாய்க்கு 2000மாவது ஆண்டில் சுற்றுலா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 215,093 ஆக உயர்ந்துள்ளது.
துபாய்க்கு விஜயம் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 1999ம் ஆண்டு துபாய்க்குசென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 198, 383 என்ற அளவில் இருந்தது.
இதே எண்ணிக்கை சென்ற ஆண்டில் 215, 093 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கை வளைகுடாநாடுகள் பல சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது.
துபாய்க்கு விஜயம் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 2010ம் ஆண்டில் 6 மில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டக்கூடும்என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கையில், 1999ம் ஆண்டு 514, 657 சுற்றுலா பயணிகள் இங்குள்ள ஓட்டல்களில்தங்கியிருந்தனர்.
ஆனால் சென்ற ஆண்டில் 583, 382 பேர் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும இலங்கை நாட்டைசேர்ந்த சுற்றுலா பயணிகள். இங்குள்ள ஓட்டல்களில் தங்கியிருந்தனர்.
1998ம் ஆண்டு துபாய்க்கு சுற்றுலா வந்த 2.18 மில்லியன் சுற்றுலாப் பயணிகளில் 29 சதவிகதம் பேர் ஆசியாவை சேர்ந்தவர்கள்என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications