நாயை காப்பாற்ற சென்ற தாய்-மகன் சாவு
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே செடிமுத்தூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் மின்சார வயர் அறுந்து விழுந்துஏற்பட்ட விபத்தில் அங்கு வசித்து வந்த விவசாயியின் மனைவி, மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் அவர்கள் வீட்டு நாயும் இறந்தது.
இந்தச் சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், இவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த நாய் மீது மின்சார வயர் அறுந்துவிழுந்தது. இதில் நாய் சம்பவ இடத்திலேயே இறந்தது.
நாயைக் காப்பாற்றுவதற்காக அங்கு வந்த நடராஜனும் (19) மின்சாரம் தாக்கிப் பலியானார். தன் மகன் நடராஜனைக்காப்பாற்றுவதற்காக அங்கு வந்த அவரது தாய் ருக்மணியும் (45) சம்பவ இடத்திலேயே இறந்தார் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications