அமெரிக்காவில் சோனியா
நியுயார்க்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சோனியா காந்தி ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாகஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா வந்து சேர்ந்தார்.
வாஷிங்டனில் அவர் பல உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஐஸ்லேண்ட் வந்த சோனியா காந்தி, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.
சோனியா காந்தியுடன் முன்னாள் நிதியமைச்சர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை முன்னாள் இணையமைச்சர் நட்வார் சிங்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முரளி தியோரா மற்றும் தொழிலதிபர் ஆர்.பி.கோயங்கா ஆகியோர் சென்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை சோனியா காந்தி அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளியுறவுத்துறை கவுன்சில் உறுப்பினர்கள்மத்தியில் உரையாற்றுகிறார். அதே நாள் அமெரிக்க முன்னாள் இணை செயலர் ஹென்றி கிஸிங்கரை சந்தித்துப் பேசுகிறார்.
செவ்வாய்க்கிழமை மாலை ஷெராட்டன் ஹோட்டலில் சோனியா காந்திக்கு அமெரிக்காவில் உள்ள காங்கிரஸார் சார்பில்வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நியுயார்க்கில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் சோனியா காந்தி, அங்கு நடக்கவுள்ள ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.ஜூன் 27 ம் தேதி வாஷிங்டன் செல்வதற்கு முன் சோனியா காந்தி ஐ.நா.சபை பொதுச் செயலாளர் கோபி அன்னனை சந்தித்துப்பேசுகிறார்.
ஜூன் 27 ம் தேதி சோனியா காந்தி வாஷிங்டனில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
சோனியா காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது, மிக முக்கியமான தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்றுவெளியுறவுத்துறை முன்னாள் இணையமைச்சர் நட்வார் சிங் தெரிவித்தார். இருப்பினும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூபுஷ்ஷை சந்தித்துப் பேசுவாரா என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை சந்திக்கும் வகையிலும், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத் தன்மையை அவர்களுக்குதெரியப்படுத்தும் வகையிலும் அவர் தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.
கடந்த 1993 ம் ஆண்டு சோனியா காந்தி, மறைந்த ராஜீவ் காந்தி அறக்கட்டளை நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகசோனியா காந்தி நியுயார்க் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications