திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் எரித்து கொலை

Subscribe to Oneindia Tamil

திருச்செங்கோடு:

திருமணத்திற்குப் பத்திரிக்கை கொடுக்கச் சென்ற வாலிபர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், பல்லக்காபாளையத்தைச் சேர்ந்தவர் சின்னண்ணன் (31). இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும்புதன்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண அழைப்பிதழ் கொடுக்க உறவினர் வீடுகளுக்குச் சென்றார்.

பத்திரிக்கை கொடுக்கச் சென்றவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரைத்தேடினர். அப்போது பல்லக்காபாளையம் சாலையில் அவரது உடல் எரிந்த நிலையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரதுசடலத்துக்கு அருகே அவரது பைக்கும் இருந்தது.

இவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் நம்புகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+