For Daily Alerts
Just In
தொழிற்சங்க தலைவர் ராமானுஜம் மறைந்தார்
சென்னை:
பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், கோவா, ஒரிசா மாநிலங்களின் முன்னாள் கவர்னருமான ஜி.ராஜாமனுஜன் சென்னையில்செவ்வாய்க்கிழமை காலமானார்.
84 வயதாகும் ராமானுஜம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது இல்லத்தில் காலமானார். சுதந்திரப் போராட்ட காலத்தில் பலபோராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.
தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு தொழிலாளர் நலனுக்காகப் போராடியவர். காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான இந்தியதேசிய தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பில் பல காலம் தலைவராக இருந்தவர்.
ராமானுஜம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி உள்ளிட்ட பலர்இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Tuesday, June 26, 2001, 5:30 [IST]