இலங்கை சிறையில் வாடும் 66 தமிழக மீனவர்கள்
கொழும்பு:
இலங்கை கடல் எல்லையில் அனுமதியின்றி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 66 தமிழக மீனவர்கள் யாழ்பாணம்சிறையில் கடந்த 3 மாதங்களாக வாடி வருகின்றனர்.
ஏப்ரல் முதல் ஜூன் வரை 66 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலில் மீன்பிடித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களின் 15 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அதே போல இந்திய எல்லையில் அனுமதியின்றி நுழைந்த 73 இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹேந்த் ராஜ்பக்ஷே சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் பிரச்சனைகளைக் கவனிப்பதற்காக இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள்குழு ஒன்று அமைக்கப்படும்.
இரு நாட்டு மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications