For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடன் தொல்லை: குடும்பமே தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்:

கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் தற்கொலை செய்து கொண்டனர்.

வத்தலக் குண்டு ஊர்க்காவல் சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் இருளப்பன் (55). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் பலரிடம் கடன் வாங்கியிருந்தார்.

கடனை அடைக்க முடியாமல் திணறி வந்தார். இதையடுத்து இருளப்பன், அவரது மனைவி பிச்சையம்மாள் (50), இவர்களது மகன்பால்பாண்டி (23), மகள் பாண்டியம்மாள் ஆகிய 4 பேரும் பூச்சி மருந்தைக் குடித்தனர்.

இதில் பாண்டியம்மாளைத் தவிர மற்ற 3 பேரும் இறந்தனர். பாண்டியம்மாள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X