கணவர் கொடுமை ..மண்ணெண்ணெய் குடித்து மனைவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே கணவரது கொடுமை தாங்க முடியாத மனைவி மண்ணெண்ணை குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை அருகே உள்ளது முடிச்சூர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா (28). இவரது கணவர் கபாலீஸ்வரன்.இருவருக்கும் திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. கபாலீஸ்வரன் அடிக்கடி குடித்து விட்டு மனைவியைக்கொடுமைப்படுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

மனைவியை மட்டும் அல்லாது பக்கத்து வீட்டுக்காரர்களோடும் கபாலீஸ்வரன் தகராறு செய்து வந்துள்ளாராம்.இதனால் அவர்களை வேறு பகுதிக்கு மாறிச் செல்லுமாறு அந்தத் தெருவில் வசித்து வந்தவர்கள் எச்சரித்துள்ளனர்.

கணவரால் தொல்லைக்குட்பட்ட சசிகலா மனம் உடைந்தார். இப்படிப்பட்ட கணவருடன் வாழ்வதை விட சாவதேமேல் என்ற முடிவுக்கு வந்த அவர் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்துக் குடித்துள்ளார்.

இதனால் ஆபத்தான நிலையில் தாம்பரத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+