நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சந்திரிகா அரசு வெற்றி பெறும்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சந்திரிகா அரசு வெற்றி பெறும் என்று பிரதமரும் தற்காலிக அதிபருமான ரத்னஸ்ரீவிக்ரமநாயகே தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, சந்திரிகா அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ளநம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு குறித்து ஜூலை 19 ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும்.

அதற்கு முன்னதாக, தொடர்ந்து 4 நாட்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும் என்றும் விக்ரமநாயகேகூறினார்.

இதுகுறித்து, அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது:

அதிபர் சந்திரிகா அரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இதன் மீதானவாக்கெடுப்பு மற்றும் விவாதத்தை விரைவில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். சந்திரிகா அரசு இதில் நிச்சயமாகவெற்றியடையும்.

இலங்கை மக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சந்திரிகா அரசு பிழைக்குமா என்பது குறித்துத் தெரிந்து கொள்ள மிகவும்ஆர்வமாக இருக்கும் இவ்வேளையில், வாக்கெடுப்பைத் தள்ளிப்போட இலங்கை அரசு விரும்பவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு உதவி செய்வதாக உறுதியளித்து, சில தமிழர்கட்சிகளிடமிருந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கையெழுத்து வாங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ஆளும் கட்சியான மக்கள் கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவைவாபஸ் பெற்றுக் கொண்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் சந்திரிகா அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்தது என்பதுநினைவிருக்கலாம்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+