தமிழகம் ஸ்தம்பித்தது
சென்னை:
சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது.
மாநிலம் முழுவதும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளன.
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்பட அனைத்து முக்கியநகரங்களிலும் திமுக பிரமுகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் அண்ணா அறிவாலயத்தின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மத்திய சிறை முன்புஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
பஸ் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அனைத்து முக்கியநகரங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பதட்டமும், பரபரப்புமாகக் காணப்படுகிறது.