For Daily Alerts
Just In
எனது உயிருக்கு ஆபத்து: கருணாநிதி பேட்டி
சென்னை:
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.
போலீஸ் காரில் இழுத்துச் செல்லப்பட்ட அவரை சில நிருபர்கள் மட்டும் சந்திக்க முடிந்தது. அவர்களிடம்கருணாநிதி பேசுகையில், என்னிடம் போலீசார் மிக மிக முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.
மிகக் கொடுமையாக நடந்து கொண்டனர். இந்த போலீசிடம் எனது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. எனதுஉயிருக்கு இவர்களால் ஆபத்து வரும் என நான் அஞ்சுகிறேன்.
வீட்டிலிருந்தவர்களை எல்லாம் இழுத்து வெளியே தள்ளிவிட்டு போலீசார் வீட்டுக்குள் என்னவோ செய்தனர்.வீட்டுக்குள் எதை வைத்தார்கள், எதை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை என்றார்.
Comments
Story first published: Saturday, June 30, 2001, 5:30 [IST]