For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் கருணாநிதி உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை சென்ட்ரல் ஜெயிலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரை அடித்து, இழுத்துக் கொண்டுசென்றனர்.

சிபிசிஐடி அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் என்று பல இடங்களுக்கும்அலைக்கழிக்கப்பட்ட கருணாநிதியை, கடைசியாக நீதிபதி அசோக்குமார் வீட்டுக்குப் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

வீட்டிலேயே முதற்கட்ட விசாரணையை நடத்திய நீதிபதி, வரும் ஜூலை மாதம் 10ம் தேதி வரை கருணாநிதியை ஜெயில் காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, கருணாநிதி சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், தனக்கு மருத்துவப்பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை என்று கூறி ஜெயில் வாசலிலேயே அவர் தர்ணா இருந்தார்.

ஆனால், ஜெயிலுக்கு வெளியே திமுக தொண்டர்களின் ஆவேசம், மிகவும் சீரியஸாக ஆனதையடுத்து, தானாகவே எழுந்துநடந்து ஜெயிலுக்குள் சென்றுவிட்டார் கருணாநிதி.

இதனிடையே, சென்னை மாநகர மேயரும், கருணாநிதியின் மகனுமாகிய ஸ்டாலின் சனிக்கிழமை காலை நீதிபதி முன்சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு, சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கருணாநிதியை வேலூர் ஜெயிலுக்கும், ஸ்டாலினை மதுரை ஜெயிலுக்கும் மாற்றப் போவதாகத் தகவல்வந்ததையடுத்து, அதை எதிர்க்கும் விதமாக கருணாநிதி உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்து வருகிறார்.

காலையிலிருந்தே அவருக்கு மருத்துவ வசதிகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதற்காகவும் கருணாநிதி உண்ணாவிரதம்இருந்து வருகிறார்.

சனிக்கிழமை காலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டதில் இருந்து, அவர் இதுவரை எதுவும் சாப்பிடவில்லை என்றுகூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X