For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய் தலைமையில் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து விவாதிப்பதற்காகடெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சனிக்கிழமை மாலை தொடங்கியது.

பிரதமரின் இல்லத்தில் தற்போது இந்தக் கூட்டம் நடந்து வருகிறது.

முன்னதாக, தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில், தமிழக அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும்.ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.கருணாநிதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றுமுடிவெடுக்கப்பட்டது.

இதற்கிடையே தமிழக முன்னாள் கல்வி அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன், தமிழகத்தில் இந்தியஅரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றுபிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X