கோவை, ஈரோட்டில் 19 பஸ்கள் கல்வீச்சில் சேதம்: 30 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை, ஈரோடு மாவட்டங்களில் 19 பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 30 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவையிலும், ஈரோட்டிலும் காலை 11 மணி வரை எந்தபஸ்களும் ஓடவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட பின்னர் சில பஸ்கள் ஓடத் தொடங்கின.
இருப்பினும், இந்த பஸ்கள் ஓடத் தொடங்கியதும், திடீரென சிலர் பஸ்கள் மீது கற்களை வீசினர். இதில் 19 பஸ்களின்கண்ணாடிகள் உடைந்தன.
கோவையில் 12 பஸ்களும், ஈரோட்டில் 7 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதையடுத்து கல்வீச்சு சம்பவங்களில்ஈடுபட்டதாக 30 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications