தமிழகத்தில் நாளை பந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து திங்கள்கிழமை பந்த்நடத்த தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதை அடுத்துதமிழகம் முழுவதும பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பாலங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுதி.மு.க. தலைவர் கருணாநிதி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டார்.
சனிக்கிழமை சென்னையில் கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இதற்குகண்டனம் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்துதிங்கள்கிழமை தமிழகம் முழுவதும் பந்த் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் காவல் பலப்படுத்தப்பட்டு உள்ளது. தி.மு.க. தொண்டர்கள்24,000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பந்த்துக்கு தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும்ஆதரவளித்துள்ளன.












Click it and Unblock the Notifications