For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அமைச்சர்கள் கைது .. புதிய சட்ட சிக்கல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் புதிய சட்ட சிக்கல்எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும்டி.ஆர்.பாலு கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதியின் வீட்டில் போலீஸாருடன் தகராறு செய்து அவர்களை கடமையாற்றவிடாமல் தடுத்ததாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முரசொலி மாறனை நேரில் சந்தித்த மாஜிஸ்திரேட்கைது தொடர்பான உத்தரவை கொடுத்தார். அவர் சிகிச்சை பெற்று வருவதால் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால்டி.ஆர். பாலு உடனடியாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டார்.

மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளது புதிய சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மத்திய அமைச்சரை கைது செய்யவேண்டுமானால் மத்திய அமைச்சரவை செயலாளர் மற்றும் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும். அப்படி இல்லாமல்ஒரு மத்திய அமைச்சர் கைது செய்யப்பட்டால் அதற்குக் காரணமான மாநில அரசு மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கைஎடுக்க முடியும் அதாவது ஆட்சியைக் கலைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை கூட செய்ய முடியும்.

இந்த நிலையில் இரண்டு மத்திய அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ள வகையில் மக்களவை சபாநாயகர் பாலயோகியும், மத்தியஅமைச்சரவைச் செயலாளரும் மாநில அரசியம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X