மத்திய அரசின் முடிவுக்கு மதிமுக ஆதரவு
சென்னை:
தமிழக அரசியல் நிலைமை குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எடுக்கும் முடிவை நாங்கள் ஆதரிப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து, இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, மதிமுக மூத்த தலைவர்கள் சனிக்கிழமை அவசரமாகக் கூடி விவாதித்தனர்.நான் வெளியூரில் இருந்த காரணத்தால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு மதிமுக கட்டுப்படும் என்று அவசரக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நான் ஆதரிக்கிறேன் என்றார் வைகோ.
சற்று முன் டெல்லியில் நடந்து முடிந்த தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் தமிழக ஆளுநர் பாத்திமா பீவியைநீக்க முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications