ஜெ. ஆட்சி கலைப்புக்கு மத்திய அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தமிழக நிலைமை குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை மத்தியஅமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர்இந்திய அரசியல் சட்டத்தின் 355 வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசின் செயல்பாடுகளை மத்திய அரசின்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மாநில அரசு தன்னிச்சையாகச் செயல்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் சரத் யாதவ் ஆகியோர் தமிழகத்தில் இந்திய அரசியல்சட்டத்தின் 356 வது பிரிவைப் பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழக நிலைமை குறித்து மத்திய அமைச்சர்களுக்குள் இருவேறான கருத்துக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தமிழகத்தில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்என்று பிரதமருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கூடும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைப்பிரகடனப்படுத்துவதா அல்லது இந்திய அரசியல் சட்டத்தின் 355 வது பிரிவுப்படி தமிழக அரசின் செயல்பாடுகளை மத்தியஅரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+