நான் அரசியல்வாதி இல்லை: பாத்திமா பீவி சீற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நான் அரசியல்வாதி இல்லை. ஒரு கவர்னர் என்ற முறையில் எனது கடமையைத் தான் செய்தேன் என பதவி விலகிச்சென்ற பாத்திமா பீவி கூறினார்.
கருணாநிதி மீது போலீஸ் நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய அரசுக்கு தவறான அறிக்கை கொடுத்ததாகக் கூறிஅவரை நீக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், அதற்கு முன்பாக தானே ராஜினாமா செய்தார் பாத்திமா பீவி.
திங்கள்கிழமை கவர்னர் மாளிகையை காலி செய்துவிட்டுக் கிளம்பிய அவர் கூறுகையில், தமிழக மக்களுக்கு எனதுவாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications