ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க பிரதமருக்கு பெர்னாண்டஸ் பரிந்துரை
டெல்லி:
தமிழகத்தில் உடனடியாக ஜெயலலிதா ஆட்சியைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க வேண்டும்என பிரதமருக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத்தெரிகிறது.
கருணாநிதியை போலீசார் அடித்து இழுத்துச் சென்றது குறித்து விசாரித்து வருமாறு ஜார்ஜ் பெர்னாண்டஸ்தலைமையில் 3 பேர் குழுவை பிரதமர் வாஜ்பாய் சென்னை அனுப்பினார்.
இந்தக் குழு கருணாநிதியை சிறையில் சந்தித்தது. பின்னர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று அங்கு போலீசார்நடந்து கொண்ட முறை குறித்து விசாரித்தது. போன்களை உடைத்தது. தாழ்பாளை உடைத்தது போன்றவற்றைஇந்தக் குழு பார்த்தது.
பின்னர் டெல்லி விரைந்த இந்தக் குழு திங்கள்கிழமை பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தது.
வாஜ்பாயிடம் பேசிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர் குலைந்துவிட்டதாகக்கூறினார். தமிழகத்தில் அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அங்கு நிலைமை மிக மோசமாகஉள்ளதாகக் கூறிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடனடியாக தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க வேண்டும்எனவும் அறிக்கை அளித்தாகத் தெரிகிறது.
அதே சமயம் இது தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் பிரதமருக்கு அளிப்பதாகவும் ஜார்ஜ்பெர்னாண்டஸ் குழு தெரிவித்துள்ளது.
மாலை 6 மணிக்கு கூடவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெர்ணான்டசின் பரிந்துரை குறித்து பிரதமர்ஆலோசனை நடத்துவார். அந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் அடுத்து என்ன நடவடிக்கை என்பது குறித்துமுடிவெடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications