குருவாயூரில் ஜெ.க்கு எதிராக பாஜக போராட்டம்: போலீஸார் தடியடி
குருவாயூர்:
கேரள மாநிலம் குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை செலுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்றதும், அங்கு அவருக்குஎதிராக பாஜக தொண்டர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி பாஜக தொண்டர்களைக் கலைத்தனர். இந்தத் தடியடிச்சம்பவத்தில் 25 பாஜக தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பாஜக தொண்டர்கள் 6 பேரைப் போலீஸார்கைது செய்தனர்.
முன்னதாக, தான் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வரானால் குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கைசெலுத்துவதாக வேண்டியிருந்தார் ஜெயலலிதா.
அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், தான் வேண்டிக் கொண்டபடி குருவாயூருக்கு காணிக்கை செலுத்த"கண்ணன்" என்ற யானையை வாங்கினார்.
சென்ற மாதம் 30ம் தேதி, யானையை காணிக்கை செலுத்த அவர் குருவாயூர் வருவார் என குருவாயூர் கோவில் தேவஸ்தானஅதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, யானை காணிக்கை செலுத்தவதற்கு தேவையான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஆனால் அதுவும் தள்ளிப்போடப்பட்டது. வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தி.மு.க. தலைவர்கருணாநிதி கைது செய்யப்பட்டதால், ஜெயலலிதா தனது பயணத்தை ஒத்தி வைத்தார் என கூறப்பட்டது.
இந்நிலையில், குருவாயூரில் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக திங்கள்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் குருவாயூர் வந்தார் ஜெயலலிதா.
திங்கள்கிழமை காலை குருவாயூர் கோவிலின் மேற்குவாயில் வழியே கோவிலுக்குள் நுழைந்தார். ஜெயலலிதா குருவாயூர்கோவிலுக்கு வந்த செய்தி தெரிந்ததும், ஏராளமான பாஜக தொண்டர்கள் கோவில் முன் குவிந்தனர்.
அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகக் கோஷமிட்டனர். போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். இதில் 25பேர்களுக்குக் காயம் ஏற்பட்டது. 6 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலைநிலவியது.
இதற்கிடையே, கோவிலின் கிழக்கு வாசல் வழியாக ஜெயலலிதா கோவிலுக்குள் நுழைந்துவிட்டார் என்று தகவல்கள்தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications