இடைக்கால ஆளுநராக ரங்கராஜன் நாளை பதவி ஏற்பு
சென்னை:
தமிழக இடைக்கால ஆளுநராக சி. ரங்கராஜன் செவ்வாய்க்கிழமை காலை பதவி ஏற்றுக் கொள்கிறார்.
தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவியை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொண்டதையடுத்து, தன்னுடையபதவியை ஞாயிற்றுக்கிழமை மாலை பாத்திமா பீவி ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, தற்போது ஆந்திர ஆளுநராக இருக்கும் ரங்கராஜன் தமிழக ஆளுநராகக் கூடுதலாகப்பொறுப்பேற்பார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டதையடுத்து நடந்த சம்பவங்கள்குறித்து சுயமாகவும், நடுநிலையுடனும் மத்திய அரக்கு ஆளுநர் பாத்திமா பீவி அறிக்கை அனுப்பி வைக்காதகாரணத்தால் அவரைத் திரும்ப அழைப்பது பற்றி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைமுடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிகே.ஆர்.நாராயணனுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அனுப்பி வைத்தார். ஜனாதிபதியும் அதை ஏற்றுக் கொண்டார்.
செவ்வாய்க்கிழமை காலை சென்னைக்கு வந்து, தமிழக இடைக்கால ஆளுநராகப் பதவி ஏற்கவுள்ளார் ரங்கராஜன்.












Click it and Unblock the Notifications