வேலூர் ஜெயிலில் 4,000 திமுகவினர் உண்ணாவிரதம்
சென்னை:
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 4,000 திமுகவினர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதே ஜெயிலில்தான் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் இதே சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஜெயிலில், அத்தியாவசியத் தேவைகள் எதுவும் கைதிகளுக்கு அளிக்கப்படவில்லை என்று கூறி, அந்த ஜெயிலில்அடைக்கப்பட்டுள்ள 4,000 திமுகவினர் திங்கள்கிழமை அதிகாலைப் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து, அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில், 200 பேருக்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கைதிகள் அனைவரும் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள 50,000 திமுகவினரின் உயிருக்கு போலீஸாரால்ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறி மத்திய அரசுக்கு பேக்ஸ் அனுப்பியுள்ளார், திமுகவைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை இணைஅமைச்சர் ராஜா.












Click it and Unblock the Notifications