கல்வீச்சில் இறந்தவர் குடும்பத்துக்கு நிதியுதவி
சென்னை:
திங்கள்கிழமை நடந்த பந்த்தின் போது, கரூர் அருகே நடந்த ஒரு கல்வீச்சு சம்பவத்தில் இறந்து போன அதிமுக தொண்டருடையகுடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.50,000 நிதியுதவி அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் ரத்தினம் என்ற பொடிமட்டையன் (48). இவர் அதிமுகதொண்டர்.
தன்னுடைய காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக, கரூர் அரசு மருத்துவமனைக்கு பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். வழியில், கட்டளை என்ற ஊரின் அருகே இந்த பஸ் மீது சிலர் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.
கல்வீச்சில் உடைந்த பஸ்சின் கண்ணாடி, ரத்தினத்தின் நெற்றியில் குத்தியது. கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்பின்னர் உயிரிழந்தார்.
நிதியுதவி அளிக்க ஜெ.உத்தரவு:
இறந்து போன ரத்தினத்தின் குடும்பத்துக்குத் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா,அக்குடும்பத்திற்கு தமிழக அரசின் குடும்பநல நிதியிலிருந்து ரூ.50,000 அளிப்பதற்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications