மதுரை சிறையில் தி.மு.க. தலைவர்கள் உண்ணாவிரதம்
மதுரை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் உள்ளிட்ட 3,000தி.மு.கவினர் மதுரை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் தொடங்கினர்.
சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின், மதுரை நகர மேயர் குழந்தைவேலு, முன்னாள் சட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கருணாநிதியை கைது செய்ததை எதிர்த்து, தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினர் அக்னிராஜ், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் மதுரையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இவர்கள் அனைவரும்சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுடன் ஏற்கனவே சிறைக்குள் உள்ள தி.மு.க. தலைவர்களும் தொண்டர்களும் தொடர்ந்து சிறையிலும் அடையாளஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை முழுவதும் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிறை அதிகாரிகள் கூறும்போது,
தி.மு.க. தொண்டர்கள் தாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக திங்கள்கிழமை பின்னிரவில்தான் தெரிவித்தனர். இதனால்இவர்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டன.
இந்தச் சிறையில் 1,200 பேரை மட்டுமே தங்க வைக்க முடியும். ஏற்கனவே இங்கு 1,900 பேர் உள்ளனர் இந்நிலையில் மேலும்2,900 தி.மு.க தொண்டர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறைக்கு வந்துள்ளனர்.
இருந்த போதிலும், கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. தொண்டர்கள் சிறை விதிமுறைப்படி நன்கு கவனிக்கப்படுவார்கள் என்றுசிறை அதிகாரிகள் கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications