கருணாநிதி உடல்நலம் பாதிப்பு
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்துள்ளது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ரத்தக்கொதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கருணாநிதியின் குடும்ப டாக்டர் கோபால் சென்னைமத்திய சிறைக்குச் சென்று அவருக்கு சிகிச்சையளித்தார்.
பின்னர் மத்திய சிறை டாக்டர்களும் கருணாநிதியைப் பரிசோதித்தனர். அவர்கள் கூறுகையில், கருணாநிதியின்உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைபெறலாம் என்றனர்.
சிறையைவிட்டு வெளியே வர கருணாநிதி மறுப்பு:
நான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 20,000 க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள்கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது, நான் மட்டும் சிறையிலிருந்து வெளியேறி சிகிச்சை பெற முடியாது.எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, நான் சிறையை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறியுள்ளார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications