சென்னை மாநகராட்சியைக் கலைக்க ஸ்டாலினுக்கு நோட்டீஸ்
சென்னை:
சென்னை மாநகராட்சியைக் கலைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
இதுகுறித்து, நகராட்சி குடிநீர் வழங்கல் துறை செயலர் சாந்தா ஷீலா நாயர் சென்னை மாநகராட்சிக்குஅனுப்பியுள்ள அறிக்கை:
மன்றம் முறையாக இயங்காத காரணத்தால் மன்றத்தைக் கலைக்கக் கருதி, மன்றத்தின் தன்னிலை விளக்கம்கோருவதற்காக இந்நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் 30 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்றும் அக்கடிதத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிதிகளின்படி, நகரின் பொதுநன்மைக்கு உகந்த வகையில் மன்றம் முறையாகச் செயல்படவில்லை. ஆனால்,கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இதற்கு அடிப்படையாக, சில குறிப்பானகுற்றச்சாட்டுக்கள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன.
மன்றத்தில் திமுகவின் பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டு மேயர் தன்னிச்சையான அதிகாரத்தைத் தவறாகப்பயன்படுத்தியுள்ளார்.
சில நிமிடங்களில் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார் மேயர்.
22.12.1999, 24.5.2000, 27.2.2001, 28.6.2001 ஆகிய நாட்களில் இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளன.
22.12.1999 ல் மன்றத்தில் குடிநீர் பிரச்சனையைப் பற்றி விவாதிக்க உறுப்பினர்கள் கோரியபோது, அதற்கு வாய்ப்புஅளிக்கப்படவில்லை.
24.5.2000ல் ஒழுங்கு பிரச்சனை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு மேயர் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்சியினர்வெளிநடப்புச் செய்தனர். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 77 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
27.2.2001 ல் கூச்சலும், குழப்பமுமான நிலையில் 78 தீர்மானங்கள் நிறைவேறின.
28.6.2001 ல் எதிர்க்கட்சியினர் பொதுப்பிரச்சனை குறித்து ஒழுங்குப் பிரச்சனை எழுப்பியபோது, 101 தீர்மானங்கள்5 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் மன்றம் முறையாகச் செயல்படத் தகுதியில்லாமல் உள்ளது. எனவே 1919 ம் ஆண்டு சென்னைமாநகராட்சி சட்டப்பிரிவு 44 ஏ யின் கீழ் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மன்றத்தைக்கலைக்கலாம் என அரசு கருதுகிறது.
ஏன் கலைக்கக்கூடாது என்பதற்கான தன்னிலை விளக்கத்தை இக்கடிதம் கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள்அரசுக்கு மேயர் அளிக்க வேண்டும்.
30 நாட்களுக்குள் மன்றத்திலிருந்து அரசுக்கு விளக்கம் கிடைக்கப்படாவிட்டால், இவ்விவகாரத்தில் அரசுமுடிவெடுக்கும் என்று அக்கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.