ஜனாதிபதி நடுநிலையான முடிவெடுக்க வேண்டும்: தாக்கரே
மும்பை:
தமிழக பிரச்சனையில் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் தலையிட்டு நடுநிலையான முடிவெடுக்க வேண்டும் என்றுசிவசேனை தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சிவசேனை பத்திரிக்கையான சாம்னாவில் பால் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 2 மத்திய அமைச்சர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.இந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூடி தமிழக நிலைமை குறித்து விவாதிக்க உள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு கொடுக்காவிடில், இதுபோன்ற சம்பவங்கள்வேறு மாநிலங்களிலும் ஏற்படும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்.
தமிழக நிலைமை குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே நேரம்சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாத ஒரு நபர் எப்படி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க முடியும்? இதுகுறித்துதேர்தல் ஆணையம் பதில் எதுவும் கூறாமல் இருப்பதுதான் வேடிக்கையானது.
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் தமிழக பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக, நடுநிலையான தீர்வு கூறவேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் பால் தாக்கரே.
யு.என்.ஐ.