ரத்தக்கண்ணீர் வடித்தேன்: இல. கணேசன்
சென்னை:
கருணாநிதியை சிறையில் சந்தித்த போது என் கண்களில் ரத்தக் கண்ணீர் வந்தது என தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க. தலைவர்கருணாநிதியை, மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் கிருபாநிதி, பொதுச்செயலாளர் இல.கணேசன், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சிறையில்சந்தித்தனர்.
கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வந்த பின் நிருபர்களிடம் இல. கணேசன் கூறுகையில், கருணாநிதியை கம்பீரமானமுதல்வராகப் பார்த்துவிட்டு. சிறையில் சக்கர நாற்காலியில் லுங்கியுடன் பார்க்கும் போது என் கண்களில் ரத்தக்கண்ணீரே வந்துவிட்டது.
அவருக்கு ஆறுதல் சொல்வதற்காகச் சென்ற எங்களுக்கு அவர் ஆறுதல் சொன்னார். அவர் நல்ல மனதைரியத்துடன் இருக்கிறார். என்னை சிறையில் வைத்துப் பார்கக வேண்டும் என தற்போதைய ஆட்சியில்உள்ளவர்கள் விரும்பினார்கள். அது நிறைவேறிவிட்டது என கருணாநிதி கூறினார்.
அவர் எப்போதுமே செய்திகளைத் தெரிந்து கொள்ள விரும்புவார். ஆனால் சிறையில் அவருக்குப் போதுமானஅளவு பத்திரிக்கைகள் வழங்கப்படவில்லை என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications