கருணாநிதியை கொல்ல சதி நடந்தது: மாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதியை ஒழித்துக் கட்ட சதி நடந்தது என மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், கருணாநிதியை கொன்றுவிடும் நோக்கத்தில் தான் நள்ளிரவில் போலீஸ் தாக்குதல்நடந்தது. இதைப் பார்த்த சாட்சியான என்னையும் கூட ஒழிக்க ஜெயலலிதா அரசு முயன்றது. எனது இருதயத்தில்பொறுத்தப்பட்டுள்ள பேஸ் மேக்கரையும் கூட போலீசார் தாக்கினார்.
நல்ல வேலையாக எனது பேஸ் மேக்கர் உடையவில்லை.
தமிழகத்தில் நிலவும் அசாதாரமான சூழ்நிலை காரணமாக இங்கு 356வது பிரிவைப் பயன்படுத்தியே ஆகவேண்டும்.
மத்திய அரசு அடி அடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முதல் நடவடிக்கையாகத் தான் மாநில அரசுக்குஎச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications