பிரபாகரனின் முக்கிய உதவியாளருக்கு வலைவீச்சு
டெல்லி:
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும்விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கூட்டாளியான கே. பத்மநாபாவைத் தேடும்முயற்சியில் இந்திய்ப புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மும்முரமாக இறங்கியுள்ளது.
கே.பி. என்று அழைக்கப்படும் இவருக்கு டி.எஸ். குமரன் என்ற பெயரும் உண்டு. விடுதலைப் புலிகளுக்குஇவர்தான் நிதி திரட்டி உதவிகள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ராஜீவ் கொலை பற்றி விசாரித்து வரும் ஜெயின் கமிஷனின் உத்தரவின் பேரில், விடுதலைப் புலிகளுக்குபைனான்ஸ் பண்ணுவது யார் என்ற விசாரணையில் சி.பி.ஐ. தீவிரமாக இறங்கியது.
பத்மநாபாதான் பைனான்ஸ் பண்ணுகிறார் என்று தெரிந்ததும், சி.பி.ஐ. தன்னுடைய தேடுதல் வேட்டையைத்தீவிரப்படுத்தியது. அவர் ஸ்வீடனில் இருப்பதாக முதலில் தகவல் கிடைத்தது. ஆனால் அந்நாட்டு அரசைத்தொடர்பு கொண்டு சி.பி.ஐ. விசாரிக்க ஆரம்பித்தபோது அதைத் தெரிந்து கொண்ட பத்மநாபா அங்கிருந்துஉடனடியாகத் தப்பிவிட்டார்.
இதையடுத்து, அவர் தாய்லாந்துக்கும், பின்னர் அங்கிருந்து ஹாங்காங்கிற்குப் பறந்ததாகவும் கேள்விப்பட்டசி.பி.ஐ., அங்கேயும் போய்த் தேடிப் பார்த்தது. ஆனால், சி.பி.ஐயைவிட அதி வேகத்தில் செயல்பட்ட பத்மநாபாமீண்டும் தப்பிவிட்டார்.
இதற்கிடையே, 2 மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்துக்கும் சி.பி.ஐ. சத்தமில்லாமல் சென்றுவந்துள்ளது. பத்மநாபாவுக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் 2 இலங்கைத் தமிழர்களையும் ஒருசீக்கியரையும் 2 வாரங்களாகத் தோண்டித் துருவி விசாரித்துள்ளது.
ஆனால், அங்கும் சி.பி.ஐ.க்கு எந்தவிதமான பிடியும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இந்த விசாரணைக்குஅந்த 2 நாட்டு புலனாய்வுத் துறையினரும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார்கள் என்று மட்டும் சி.பி.ஐ. கூறுகிறது.
இதைத் தொடர்ந்து, பத்மநாபா வேட்டையை சி.பி.ஐ. மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர்இவர் இந்தியாவில் இருந்தார் என்றும், விடுதலைப் புலிகளுக்குப் பாதுகாப்பாக வீடுகள் ஏற்படுத்திக் கொடுத்தார்என்றும் கூறப்படுகிறது.
இவர் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டே இருப்பவர். பல்வேறு பெயர்களில் ஏராளமானபாஸ்போர்ட்டுகளை வைத்துக் கொண்டு, உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications