போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கலாம்: மூப்பனார்
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்படும்போது காவல்துறையினர் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கைஎடுப்பதில் தவறில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறினார்.
இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்துள்ளது தொடர்பான வழக்கில், முன்னாள்முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று நான் ஆரம்பம் முதலே கூறிவருகிறேன்.
கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டபோதுபோலீஸார் மிகவும் அராஜகமாக நடந்து கொண்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தவறும்இல்லை.
தற்போது 356 என்ற பேச்சுக்கே இடமில்லை. அது முடிந்துபோன விஷயம். இவ்விஷயத்தில் ஏற்கனவே மத்தியஅரசு தனது முடிவை அறிவித்துவிட்டது என்றார் மூப்பனார்.