கருணாநிதி நாளை மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் திமுக தலைவர் கருணாநிதிவெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீசாரால் தாக்கப்பட்ட கருணாநிதி கைதுசெய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. 106 மணி நேர சிறை வாசத்துக்குப் பிறகுஅவர் புதன்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டார்.
கருணாநிதியை அவரது குடும்ப மருத்துவரான கோபால் மற்றும் டாக்டர் ராமானுஜம்,டாக்டர் தணிகாசலம் ஆகியோர் கொணட குழு வியாழக்கிழமை பரிசோதனைசெய்தது. அப்போது கருணாநிதி தனக்கு உடல் வலி இருப்பதாக கூறினார்.
இதனால் மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கமுடிவு செய்துள்ளனர்.
மருத்துவர்களின் ஆலோசனையின் படி கருணாநிதி வெள்ளிக்கிழமை சென்னைஅப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.
அவர் அங்கு சில தினங்கள் தங்கி சிகிச்சை பெறுவார்.
தொண்டர்கள் வர வேண்டாம்:
இந் நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த கருணாநிதியைக் காண மாநிலத்தின் பலபகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்த வண்ணம்உள்ளனர்.
கருணாநிதிக்கு ஓய்வு தேவைப்படுவதாலும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படஉள்ளதாலும் தொண்டர்கள் யாரும் அவரை காண்பதற்கு வரவேண்டாம் என தி.மு.க.தலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications