எதையும் மூடி மறைக்கவில்லை: பாத்திமா பீவி பேச்சு
திருவனந்தபுரம்:
ஆளுநருக்குரிய கடமையைத்தான் செய்தேன் என்றார் முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்ற முறையில் நான் என்னென்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தேன். நான்ஏதோ மிகவும் தாமதமாகத்தான் என்னுடைய அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியதாக என்மேல் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆனால் எல்லாம் ஒவ்வொருவரின் பார்வையைப் பொறுத்துதான் இருக்கிறது. நான் எதையும் மூடிமறைக்கவில்லை. நடந்த எல்லாவற்றையும் நீங்கள் பார்க்கத்தான் செய்தீர்கள்.
ஏதோ இப்போதைக்கு உங்கள் முன் இருப்பதால்தான் நான் இவ்வளவையும் பேசுகிறேன். இதுவே தமிழ்நாடுஎன்றால், நான் இதைக்கூட பேசியிருக்க முடியாது.
நான் இந்த நிமிடம் வரை சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். தற்போது நடந்த எந்த சம்பவத்திற்காகவும் நான்வருத்தப்பட்டது கிடையாது என்றார் பாத்திமா பீவி.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஏன் எந்த ஒரு சமரசப் பேச்சையும் எடுக்க முயற்சிக்கவில்லை என்றகேள்விக்கும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவை அழைத்து தமிழக முதல்வராக ஏன்பதவியில் உட்கார வைத்தீர்கள் என்ற கேள்விக்கும் பதில் அளிக்க பாத்திமா பீவி மறுத்து விட்டார்.
முன்னதாக, வியாழக்கிழமை காலை சென்னை விமான நிலையத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தலைமைச்செயலாளர் சங்கர், அமைச்சர்கள், டிஜிபி ஏ. ரவீந்திரநாத் ஆகியோர் பாத்திமா பீவியை வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக அவர் ராஜ்பவனை செவ்வாய்க்கிழமையே காலி செய்துவிட்டு வெளியேறினார். அவர் டெல்லிக்கோஅல்லது கேரளாவுக்கோ போயிருக்கக் கூடும் எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் சென்னையில் தான்இருந்துள்ளார். வியாழக்கிழமை தான் அவர் கேரளா போனார்.
யு.என்.ஐ.