இலங்கையில் அமெரிக்க ராணுவ அதிகாரி
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைச் சந்திப்பதற்காக அமெரிக்க பசிபிக் ராணுவப் படையின் தலைமைத்தளபதி அட்மிரல் டென்னிஸ் பிளேர் அடுத்த வாரம் இலங்கை வருகிறார்.
1995ம் ஆண்டுக்கு அப்புறம் ஒரு அமெரிக்க ராணுவ உயரதிகாரி இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறை.
ராணுவத்தினருக்கு கமாண்டோ பயிற்சியிலிருந்து, கப்பல் படையினருக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சி வரை,இலங்கை ராணுவத்திற்குப் பல வழிகளில் பயிற்சி அளித்துள்ள பெருமை அமெரிக்காவையே சேரும். இலங்கைராணுவத்திற்காக பல்வேறு பயிற்சி முகாம்களை அமெரிக்கா நடத்தியிருக்கிறது.
மேலும் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரும்பெரும்முயற்சிகளை எடுத்து வரும் நார்வே தூதுக் குழுவினரை முழுக்க முழுக்க உற்சாகப்படுத்தி வருகிறது அமெரிக்கா.நார்வே தூதுக் குழுவினர், தற்போது புதிய தலைமையுட னும் புதுப் பொலிவுடனும் பேச்சுவார்த்தை நடத்தவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த வார இறுதியில், விடுதலைப்புலிகள் முகாம்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய ஷெல்தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்துள்ளது. பேச்சுவார்த்தை நடப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் இந்த வேளையில், ஷெல் தாக்குதலை நடத்தியிருப்பது பேச்சுவார்த்தைக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டையாகும் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ அதிகாரி பிளேர் இலங்கைக்கு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது. ஆனால், 2 நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகத்தான்பிளேரின் இந்த விசிட் என்கிறது ஒரு இலங்கைப் பத்திரிகை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications