கருணாநிதி எனக்கு உறவினர் மாதிரி: டி.ஜி.பி. கிண்டல்
சென்னை:
கருணாநிதி எனக்கு உறவினர் மாதிரி என்று கிண்டலடித்தார் தமிழக டி.ஐ.ஜியான ஏ. ரவீந்திரநாத்.
சென்னையில் அவர் வியாழக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது:
கருணாநிதி எனக்கு நெருங்கிய உறவினர் மாதிரி, அதாவது அவர் எனக்கு மாமா மாதிரி. மரியாதைநிமித்தமாகத்தான் அவரைப் பார்க்க பலமுறை அவருடைய வீட்டிற்கும் சென்றுள்ளேன்.
ஆனால் அவர் கூறியது போல, டி.ஜி.பி. பதவி வேண்டும் என்பதற்காக அவருடைய வீட்டிற்கு நடையாகநடக்கவில்லை. அவர் ஏன் என்னை இப்படிக் கிண்டலடித்தார் என்றும் எனக்குத் தெரியவில்லை என்றார்ரவீந்திரநாத்.
முன்னதாக, புதன்கிழமை இரவு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, "டி.ஜி.பி. ரவீந்திரநாத்துக்குரொம்பவும் கிண்டல்தான். என்னைப் பற்றி எதைக் கூறினாலும் அவர் கிண்டலாகத்தான் கூறுகிறார்,கிண்டலாகத்தான் பேசுகிறார்.
டி.ஜி.பி. பதவியைத் தனக்குத் தர வேண்டும் என்று கூறி எனது கோபாலபுரம் வீட்டுக்கு நடையாய் நடந்தார். அதைநான் கொடுக்காததால், என் மீது ரவீந்திரநாத்துக்குக் கோபம். அவரிடம் கோபம் இருக்கிறதா என்றுதெரியவில்லை. ஆனால் அவர் மூலம் கோபம் வெளிப்படுத்தப்படுகிறது" என்று கூறியிருந்தார் கருணாநிதி.