மதுரை சிறையில் ஸ்டாலினைச் சந்தித்தனர் குடும்பத்தினர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மு.க. ஸ்டாலினை புதன்கிழமை பிற்பகல் அவருடைய குடும்பத்தினர்சென்று சந்தித்தனர்.

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருடைய மகனும், சென்னை மாநகர மேயருமான ஸ்டாலின், தானாகவேநீதிபதியின் முன் சரணந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஸ்டாலினைப் பார்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை வரை போலீஸார் யாரையும் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் அவருடைய மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, அன்பில் பொய்யாமொழியின்மகன் மகேஷ் ஆகியோர் புதன்கிழமை பிற்பகல் மதுரை மத்திய சிறைக்கு வந்தனர். இவர்களுடன் மதுரை மேயர்குழந்தைவேலுவும் வந்திருந்தார்.

பின்னர் அவர்கள் அனைவரும் ஸ்டாலினைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 45 நிமிடம் அவரைச்சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னர், துர்கா நிருபர்களிடம் பேசியபோது:

என் கணவரின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. சென்னை சிறைக்கு அவரை மாற்றினால், அடிக்கடி அவரைப்பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். அவர் மீது ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி எனக்குத்தெரியாது.

வழக்கு பற்றி அவரிடம் நான் எதுவும் பேசவில்லை. ஆனால் சட்டப்படி வழக்கைச் சந்திப்பேன் என்று அவர்ஏற்கனவே கூறியுள்ளாரே?

அவர் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்பது எல்லோருக்குமே தெரியும்.

மனிதாபிமான அடிப்படையில் தலைவரை விடுதலை செய்துள்ளதாகக் கூறினார்கள். அடித்து, இழுத்துக் கொண்டுசென்ற போது, இந்த மனிதாபிமானம் எங்கே போனது? ஒரே வழக்குதானே, மற்றவர்களையும் விடுதலைசெய்துவிட வேண்டியதுதானே என்றார் ஸ்டாலினின் மனைவி துர்கா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+